Tuesday, 23 December 2014

ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார் வள்ளுவர்!

வான்புகழ் வள்ளுவர், ரஷ்ய மண்ணில் கம்பீரமாகக் காட்சி அளிக்கப்போகிறார். இந்திய அரசு, திருவள்ளுவரின் பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், திருவள்ளுவரின் சிலையை நிறுவ, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாம். 'சிலையை வைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்து வருகிறோம். இதன் மூலம் இந்தியாரஷ்யா இடையேயான கலாசாரப் பரிமாற்றம், நட்புறவு மேம்படும்’ என்று இந்தியாவுக்கான ரஷ்யத் துணைத் தூதர், கோட்டோவ் (Kotov) தெரிவித்துள்ளார். வாழ்க வள்ளுவம்!

No comments:

Post a Comment