Wednesday, 16 July 2014

ராவணன் சிங்களனா, வட இந்தியனா, தமிழனா?


இலங்கை தேசியவாதிகள் ராவணன் சிங்களன் எனவும் இந்திய படைகள் ராமன் தலைமையில் அவனை அழித்து இந்தியமேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தின எனவும் கூறுகின்றனர்

ராவணன் ஹெலவம்சம் எனவும் ஹெலவம்சத்தில் யக்க,நாக,அசுர,ராக்ஷச என நான்கு இனங்கள் இருந்ததாகவும் இலங்கைதேசியவாதிகள் கூறுகின்றனர்.ராவணன் பேசியது ஹெலபாஷை.ஹெலபாஷை தான் திரிந்து சிங்கள பாஷையானதாகவும் கூறுகின்றனர்.இது பற்றி பிகே பாலசந்திரன் எழுதிய கட்டுரையில் இலங்கையின் ஹெலா இயக்கத்தை பற்றி குறிப்பிடுகிறார்.ஹெலா இயக்கம் இந்திய கலாசார ஆதிக்கத்தை கைவிட்டு ஆதி சிங்கள கலாசாரத்துக்கு செல்ல சிங்களை வலியுறுத்துகிறது.சிங்கள தேசியவாதியான அஹிபுது எழுதிய சாக்விதி ராவணா (1988) நூலில் ராவணனின் சிங்கள வேர்கள் விவரிக்கபடுகின்ரன.ரா என்றால் சூரியன் எனவும் வணா என்றால் வம்சம் எனவும் விளக்கம் அளிக்கபடுகிறது.

முனிதாச குமாரதுங்க ராவணன் சிங்கள மொழியில் ஆறு மருத்துவநூல்கள் எழுதினதாக கூறுகிறார் (Nadi ParikshaArka PrakashataUddisa ChiktsayaOddiya ChikitsaKumara Tantraya and Vatina Prakaranaya),.இவை பின்னாளில் சமஸ்கிருதத்துக்கு மொழிபெயர்க்கபட்டனவாம்.

இந்தியர்களும் ராவணனுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். ராவணனுக்கு இரு கோயில்கள் உள்ளன.ஒன்று மத்தியபிரதேசத்தில் உள்ள ராவணநகர்  கிராமத்தில் இருக்கிறது.அங்கே உள்ள 6000 கன்யாகுப்ஜ பிராமணர்கள் தம் குலமுன்னோரான ராவணனை வணங்குகின்றனர்.அங்கே 10 அடி உயரமுள்ள் ராவணபாபா சிலை இருக்கிறது.தினசரி பிரசாதமாக பூரியும், பாதாம்கீரும் வழங்கபடுகிறது

இன்னொன்று தென்னிலங்கையில் உள்ள இலா நீர்வீழ்ச்சி அருகே உள்ளது.அங்கே சிங்களர்கள் ராவணனை வணங்குகின்றனர்.ரோஹன என்ற பெயரில் இருக்கும் சிங்கள நகர்களும் பெயர்களும் ராவண என்பதன் திரிபே என தெரிகிறது.

ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே மண்டோர் என்ர ஊர் உள்ளது.அந்த கிராமத்தவர்கள் மண்டோதரி தம் ஊரை சேர்ந்தவள் எனவும் ராவணன் தம் மருமகன் எனவும் கூறுகின்றனர்

No comments:

Post a Comment